வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Saturday, January 7th, 2023

இந்த வருட இறுதிக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் அதற்கான அடிப்படைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தை பார்வையிட வெகு தொலைவில் உள்ள ஒருவர் கொழும்புக்கு வருவது மிகவும் சிரமமாக இருப்பதால் இந்த டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் :

“டிஜிட்டல் அமைப்புகளின் தேவை நீண்ட காலமாக உள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தை சந்திக்க கொழும்புக்கு ஏன் வர வேண்டும் என்பது நீண்ட காலமாக கேட்கப்பட்ட ஒன்று. தற்போது யாழ்ப்பாணத்தில் அலுவலகம் உள்ளது. இப்போது வராமல் வீட்டிலிருந்தே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு இந்தப் பணியைச் செய்ய முயற்சிக்கிறோம். கடந்த ஆறு மாதங்களில், தொழிலாளர் அமைச்சில் இந்தப் பணிகளைச் செய்துள்ளோம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவோம் என்று நம்புகிறோம். இந்த நாட்களில், வெளிநாட்டு முதலாளி  ஒருவர் எங்கள் பணியாளர்களில் ஒருவரைக் கண்டுபிடிக்க விரும்பினால், அவர்கள் அதை அங்கிருந்து ஒன்லைனில் செய்யலாம். மேலும் வெளிநாட்டு வேலைகள் தொடர்பான அனைத்து பணிகளையும் டிஜிட்டல் தளம் மூலம் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: