பணி நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Monday, April 9th, 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோரை பணி நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஜனாதிபதியை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர். கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சுசில் பிரேமஜயந்த, சுசந்த புஞ்சி நிலமே, ஜோன் செனவிரட்ன உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டாக இணைந்து எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு புறம்பாக துமிந்த திஸாநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Related posts: