20 வருட கால தொழில் வாழ்க்கையில் பரிசுப்பொருட்களுடன் சிரேஸ்ட அதிகாரிகளை சந்திக்க சென்றதில்லை : புலனாய்வுதுறையின் முன்னாள் பணிப்பாளர்!

Friday, August 21st, 2020

தாம் தமது பதவிக்காலத்தில் நாட்டின் ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ புதுவருடம் அல்லது ஏனைய சுப நிகழ்வுகளின் போது வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர்களிடம் சென்றதில்லை என்று அரச புலனாய்வுதுறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்த தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு புதுவருடப் பிறப்பின் போது சிரேஸ்ட அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கச் செல்லும் போது தாக்குதல்கள் தொடர்பாக வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவினரின் எச்சரிக்கை பற்றி ஏன் கூறவில்லை என்று ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கேட்டபோதே நிலந்த ஜெயவர்த்தன தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு உளவுத்துறையின் எச்சரிக்கை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியதாகவும், அது தொடர்பில் செயற்பட்டிருக்க வேண்டியது அவர்களின் கடமை என்றும் நிலந்த ஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

தமது 20 வருட கால தொழில் வாழ்க்கையில் பரிசுப்பொருட்களுடன் தமது சிரேஸ்ட அதிகாரிகளை சந்திக்க சென்றதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: