விவசாயிகளுக்கு உரமானிய உதவி!
Monday, January 15th, 2018
அரசாங்கத்தின் உரமானிய வேலைத்திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்ட விவசாயிகளுக்கு உரத்தை கொள்வனவு செய்வதற்காக 170 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த நிதி வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக உரமானியம் இம்முறை வழங்கப்படவுள்ளதாக தேசிய உர செயலகத்தின் மாத்தறை மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
முதற் கட்டமாக 246 ஹெக்டெயர் விஸ்தீரனமான நிலப்பரப்பில் நெல் பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு உரமானிய உதவி வழங்கப்பட்டிருப்பதாக அலுவலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
இலங்கை - அவுஸ்திரேலியா இடையில் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கான உடன்படிக்கை !
யாழ்.கீறின் பில்ட் சன சமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் இலவச வைத்தியமுகாம்!
தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி!
|
|