“13” தொடர்பில் கட்சித் தலைவர்கள் யோசனையைச் சமர்ப்பிப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் – ஜனாதிபதியால் வாழங்கப்பட்டுள்ளதாக தகவல்!
Tuesday, August 1st, 2023
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை வழங்கியுள்ளார். அதற்கேற்ப கட்சித் தலைவர்கள் அவர்களது யோசனையைச் சமர்ப்பிப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.
“13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பது ஜனாதிபதியாகிய என்னிடமல்ல; நாடாளுமன்றத்திடம்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சிக் கூட்டத்தில் கூறியிருந்தார்.
அதன்படி 13 ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பான பொறுப்பு எம்.பிக்களின் கைகளுக்கு வந்துள்ளது.
இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான யோசனையை முன்வைப்பதற்குக் கட்சித் தலைவர்களுக்கு இரண்டு வார கால அவகாசத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான அமைச்சரவை உப குழு அந்த யோசனையை ஆராய்ந்து பார்த்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


