மே தினத்தன்று அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகள் பஸ்களுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது!

Saturday, April 8th, 2017

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக பயணிக்கும் பயணிகள் பஸ்களிடம் கட்டணம் அறவிடப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி மற்றும் அதிவேக நெடுஞ்சாலை அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல இத்தகவலை பாராளுமன்றில் வெளியிட்டுள்ளார். அனைத்து கட்சிகளிடமிருந்தும் கிடைத்த கோரிக்கைக்கு அமையவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிகாட்டினார்.

Related posts: