கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு!
Tuesday, January 14th, 2020
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
உற்பத்திக் கைத்தொழில் துறைகளில் 20 தொழில் துறைகளில் 12 துறைகளின் உற்பத்தியில் சாதகமான வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மரம் மற்றும் மரம் சார்ந்த உற்பத்திகள், கடதாசி மற்றும் கடதாசி உற்பத்திகள், இரசாயனம் மற்றும் இரசாயன உற்பத்திகள் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
பருத்தித் துறைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு தமிழக மீனவர்கள் கைது!
மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 350 ஆக அதிகரிப்பு - கல்வி அமைச்சு !
வறட்சியுடன் கூடிய காலநிலை - யாழ் மாவட்டத்தில் 69 ஆயிரத்து 113 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ பி...
|
|
|


