பருத்தித் துறைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு தமிழக மீனவர்கள் கைது!

Monday, August 14th, 2017
 
யாழ்ப்பாணம்   பருத்தித் துறைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு தமிழக மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(13) இரவு கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
 குறித்த மீனவர்கள்   மீன்பிடிக்காகப்  பயன்படுத்திய படகொன்றும்,  ஏனைய மீன்பிடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட நான்கு மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்றைய தினம் யாழ்ப்பாணம் உதவி மீன்பிடித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: