மோட்டார்ச் சைக்கிளில் வேகமாக வந்தவர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்ற யுவதியை மோதிவிட்டுத் தப்பியோட்டம்!

Sunday, March 27th, 2016

மோட்டார்ச் சைக்கிளில் வேகமாக வந்த இனந் தெரியாதோர் துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கிச்  சென்றுகொண்டிருந்த இளம் யுவதியை மோதி வீட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று (26) இரவு7 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்துச்  சம்பவத்தில் 25 வயதான  யுவதி காலில் காயங்களுக்கு உள்ளானதுடன் அவர்  செலுத்தி வந்த துவிச்சக்கர வண்டி கடுமையான சேதங்களுக்கு உள்ளானது.

சம்பவம் நடைபெற்ற பின்னர் அப் பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடிய போதும் சம்பவத்துக்குக் காரணமான மோட்டார்ச் சைக்கிள் செலுத்துனர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. விபத்துச் சம்பவத்தையடுத்துக் குறித்த யுவதி அழுதவாறு நின்ற நிலையில் பொதுமக்கள் அவரை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் வேண்டாம் – எதிர்வரும் இரு வாரங்களுக்காவது விழிப்பாக இருங்கள் - மக்களிடம் ...
கிழக்கில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக ஆளுநரால் அறிவிப்பு!
புத்தாண்டு சுபநேர பத்திரம் – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் ஜனாதிபதியிடம் கையளிப்பு !