பச்சிளங் குழந்தையை கைவிட்ட தாய் கைது!
Wednesday, August 10th, 2016
யாழ். வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் பிறந்து 10 நாட்களேயான ஆண் சிசுவை பெட்டிக்குள் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும் தாயை இன்று (10) கைதுசெய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அளவெட்டியைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சிசு தனக்குப் பிறக்கவில்லையென்று கணவர் சண்டையிட்டமையால், சிசுவை வீதியில் விட்டுச் சென்றதாக அத்தாய்; கூறியுள்ளார்.
சைக்கிளொன்றில் வந்தவர்கள் சிசுவை அப்பகுதியில் வைத்துவிட்டுச் சென்றிருந்தனர். சிசுவை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இத்தாயைக் கைதுசெய்துள்ளனர். குறித்த தாய் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்
Related posts:
வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் கைதானோருக்கு பிணை மறுப்பு!
முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்கள் வருகை அதிகரிப்பு!
பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க தடை - பொலிஸார் அறிவிப்பு!
|
|