விரைவில் பண்ணை சுற்றுலாக் கடற்கரை விஸ்தரிப்பு பணிகள் ஆரம்பம்!
Friday, November 24th, 2017
நகர அபிவிருத்தி அதிகார சபையின் 50 மில்லியன் ரூபா செலவில் பண்ணை உல்லாசக் கடற்கரைப் பகுதி விஸ்தரிப்பு பணிகள் இடம்பெறவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.எ.ஜ.கே.குணதிலக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் தமது நேரத்தை பிரயோசனமாகவும் இலகுநடைப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் வசதியாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் 18 மில்லியன் ரூபா செலவில் பண்ணையில் உல்லாசக் கடற்கரை அமைக்கப்பட்டு யாழ்.மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கடற்கரையின் ஒரு கிலோமீற்றர் நீளமான நடைபாதை மற்றும் ஓய்வு இருக்கைகள் என்பன அமைக்கப்படவுள்ளன. இதனூடாக மக்கள் குறித்த உல்லாசக் கடற்கரையினை பிரயோசனமுள்ளதாகப் பயன்படுத்த வழியேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய சட்ட மூலத்திற்கு எதிராக மனு தாக்கல்!
இலங்கையில் பலரது பாராட்டுக்களைப் பெற்ற பேருந்து நூலகம்!
"ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு " – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ...
|
|