விபத்தில் ஆசிரியர் உயிரிழப்புக்கு காரணமான சாரதிக்குப் பிணை!

Monday, November 28th, 2016

அச்சுவேலி – நாவற்காடு பகுதியில் ஹன்ரர் வாகனம் மோதி பிரபல வர்த்தக ஆசிரியர் பசில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த சாரதிணை 2லட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் அனுமதியளித்துள்ளார். அத்துடன் வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 05ஆம் திகதிக்கு அவர் ஒத்திவைத்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 05அம் திகதி, மரண வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது எதிரே வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஹன்ரர் வாகனம் ஆசிரியர் சென்ற சைக்கிளை மோதித்தள்ளியது. இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான ஆசிரியரான பசில் அவரது மனைவி இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் ஆசிரியர் பசில் (வயது50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

bail

Related posts: