கருத்து சுதந்திர உரிமை இல்லாதொழிக்கப்படாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!

Friday, June 16th, 2023

பிராந்தியத்தில் எந்தவொரு நாட்டிலும் செய்யப்படாத குற்றவியல் அவதூறு சட்டத்தை நீக்கியதன் மூலம் கருத்துக்களை வெளியிடும் உரிமையை தாம் ஒருபோதும் இல்லாதொழிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

உத்தேச இலத்திரனியல் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டமானது இலத்திரனியல் ஊடகத்தினால் எந்தவொரு தரப்பினருக்கும் பாரபட்சம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை மாத்திரமே வழங்குவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இலத்திரனியல் ஊடகங்களைக் கையாள்வதற்கு இவ்வாறான முறை பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்த .ரணில் விக்கிரமசிங்க, இலங்கையிலும் இதனை நடைமுறைப்படுத்துவதில், ஐக்கிய இராச்சியத்திலும் இலத்திரனியல் ஊடகங்களுக்கும் அதே வழிகாட்டல்களை உள்ளடக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஹோமாகம பிரதேச செயலக வளாகத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையத்தளத்தில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள், தீவு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 50 பிராந்திய செயலக அலுவலகங்கள் ஊடாக தமது வெளிநாட்டு கடவுச்சீட்டிற்கு இலகுவாக இணையவழியில் விண்ணப்பிக்கும் வாய்ப்பு இப்போது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


எட்டு வருடங்களில் இரட்டிப்பாக அதிகரித்த வாகனங்களின் எண்ணிக்கை - அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா!
மனுஸ் தீவில் உயிரிழந்த  அமரர் ரஜீவ் ராஜேந்திரனின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை...
அனுமதி கிடைக்கும் போதெல்லாம் மின்சார கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் - அமைச்சர் ...