வான்படை பயிற்சி முகாமில் குண்டு வெடிப்பு!
Friday, September 8th, 2017
திருகோணமலை – மொரவெவ வான்படை பயிற்சி முகாமில் கைக்குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 4 இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த வான் படை முகாமில் இராணுவ சிப்பாய்களுக்காக பயிற்சி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு இராணுவ சிப்பாய், கைக்குண்டை வீசும் முறை தொடர்பில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அது வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்துள்ள இராணுவ சிப்பாய்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Related posts:
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1924 ஆக அதிகரிப்பு!
இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியல்!
வெளியானது பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர, பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள், பிர...
|
|
|


