கடந்த மூன்று வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய எச்சரிக்கை!

Saturday, July 10th, 2021

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வாரங்களில், வாரம் ஒன்றிற்கு 700 நோயாளர்கள் என்ற அடிப்படையில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பருவப்பெயர்ச்சி மாற்றம் ஏற்படுகின்ற காலப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, தற்போது பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 9 ஆயிரத்து 361 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவர்களில் அதிகளவானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: