வலி. கிழக்குப் பிரதேசத்தில் வாழைக்குலைத் திருட்டு அதிகரிப்பு!
Thursday, August 18th, 2016
வலி. கிழக்குப் பிரதேசத்தில் அண்மைக் காலமாக இரவு வேளைகளில் வாழைக்குலைத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகப் பிரதேச மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தற்போது வாழைப் பழத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டி வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வலி. கிழக்குப் பிரதேசத்தின் கோப்பாய் இராச வீதி, நீர்வேலி மேற்கு மாலை வைரவர் கோவிலடி, சிறுப்பிட்டி, நவக்கிரி போன்ற பகுதிகளிலுள்ள வாழைத் தோட்டங்களிலேயே இந்த வாழைக் குலைத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக வாழைச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸார் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
நடைபாதையில் பொருட்களை வைத்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட பத்து வியாபாரிகளுக்கு அபராதம்!
அடைமழை தொடரும் - அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!
கடந்த அரசாங்கத்தின் மருந்து கொள்வனவில் பாரிய நிதி முறைகேடு - CID யில் முறைப்பாடு !
|
|