கடலில் நெஞ்சுவலி –  மீனவர் உயிரிழப்பு !

Thursday, December 28th, 2017

மண்கும்பான் கடலில் மின் பிடித்துக்கொண்டிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. அல்லைப்பிட்டி 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஸ்லான்லஸ் (வயது 63) என்பவரே  உயிரிழந்துள்ளார்.

இவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது நெஞ்சுவலியால் தடுமாறியுள்ளார். படகில் இருந்தவர் அவலை கரைக்கு கொண்டு வந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குன் கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்தார்;. இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் மேற்கொண்டார். உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts: