லசித் மலிங்க பயணித்த விமானத்தில் இயந்திரக் கோளாறு!

Monday, March 14th, 2016

இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கல்கத்தா நோக்கி செல்லவிருந்த எம்.ஜீ.331 இலக்க விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கத்தா நோக்கி செல்லவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 150 இற்கும் அதிகமான யாத்திரிகர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக லசித் மலிங்கவும், இந்தப் போட்டியை பார்வையிடுவதற்காக தினேஸ் சந்திமாலின் மனைவியும் குறித்த விமானத்தில் பயணிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளது - முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் குற்றச்சாட்டு!
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜப...
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகள் அழைத்துவரப்படும் பேருந்துகளுக்கு CCTV கமராக்களை பொருத்துவதற்கு நட...