ரெலிகொம் மனிதவலு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

Tuesday, March 21st, 2017

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தைச் சேர்ந்த மனித வலு ஊழியர்கள் நடத்திவந்த கவனயீர்ப்பு போராட்டம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக தொடரப்படவுள்ளதாகபொராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் புறக்கோட்டையில் உள்ள ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு முன்பாக இவர்கள் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த பல வருடங்களாக ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தில் தற்காலிகமாக பணிபுரிந்துவரும் தங்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்குமாறு கோரி மனித வலு ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் உரிய அதிகாரிகள் இதுவரை பதில் அளிக்காத நிலையில் இன்றைய தினம் நிறுவனத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கவனயீர்ப்பு போராட்டமாக இராப்பகலாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்தப் போராட்டம் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக முன்னெடுக்கப்படும் என்று மனிதவலு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

Related posts: