ராஜகிரிய மேம்பாலம் டிசம்பரில் பூர்த்தி!

Friday, September 1st, 2017

ராஜகிரிய மேம்பாலம் உரிய தரத்துடன் பொறியியலாளர்களின் கண்காணிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுவருவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்டவையாகும். இவற்றை பொருத்தும் பணிகள் பொருளியலாளர்களின் பணிப்புரைக்கமைய, அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றுவருகின்றது.இந்த மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை அடுத்த ஆண்டு பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டிருந்தாலும், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு!
தடுப்பூசி திட்டத்தின் வெற்றியினால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவு - விசேட வைத்திய...
13 ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை - வெளிவிகவார அமைச்சர் அலி சப்ரி தெரிவி...