ரவிராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு 7 பேர் கொண்ட ஜூரி சபை நியமனம்!
Wednesday, November 23rd, 2016முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு 7 பேர் கொண்ட ஜூரி சபை நியமிக்கப்பட்டுள்ளது..
நடராஜா ரவிராஜ் மற்றும் அவரின் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொலை செய்தமை உள்ளிட்ட 7 குற்றங்கள் தொடர்பில் வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் கடற்படை வீரர் மூன்று பேர் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் ஜூரி சபை நேற்று நியமிக்கப்பட்டதுடன், சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Related posts:
அடுத்த இரண்டு வருடங்களுள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தீர்வு -கல்வி அமைச்சர்!
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தொடரும் நெருக்கடி - வல்வெட்டித்துறை நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்...
இந்தியா மற்றும் இந்தோநேசியாவின் நன்கொடை - எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் - சுகாதார அமைச்ச...
|
|