யாழ். வடமராட்சியில் மர்மக் கும்பலின் வாள்வெட்டில் குடும்பஸ்தர் படுகாயம் !

Thursday, August 10th, 2017
 

யாழ். வடமராட்சி அல்வாய்ப் பகுதியில் மர்மக் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகிய குடும்பஸ்தரொருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ந்த வாள்வெட்டுச் சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அல்வாய் வடக்கு முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த சின்னத்தம்பி கமல்ராஜ்(வயது-53) என்பவரே படுகாயமடைந்தவராவார்.  சம்பவம் தொடர்பில் பருத்தித் துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: