இதுவரை 71 பேர் பலி!
Sunday, May 22nd, 2016கேகாலை அரநாயக்கவில் மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதை அடுத்து சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 497 தற்காலிக முகாம்களில் தற்போது இரண்டு இலட்சத்து 78 ஆயிரத்து 528 பேர் தங்கியிருப்பதோடு மொத்தமாக மூன்று இலட்சத்து 75 ஆயிரத்து 604 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.
எனினும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய 474 வீடுகள் முழுமையாக சேதமடைந்திருக்கும் அதேவேளை மூவாயிரத்து 674 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை வருகின்றார் ஜெர்மனிய நாடாளுமன்ற தலைவர்!
புகையிரத நிலையத்தில் 6 கிலோ மீட்பு!
பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|