யாழ் முயற்சியாளர் விற்பனைக் கண்காட்சி!
Friday, August 17th, 2018
யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடத்தப்படும் யாழ் முயற்சியாளர் விற்பனைக் கண்காட்சி எதிர்வரும் 24, 25, 26 ஆம் திகதிகளில் யாழ் நல்லூர் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளன.
சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும் அவற்றுக்கான சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் முகமாகவும் யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சிப்பிரிவு குறித்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
குறித்த கண்காட்சியை பார்வையிட்டு உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்;பதோடு உள்ளுர் உற்பத்தி பொருட்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்து பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
Related posts:
167 மில்லியன் மோசடி வழக்கை மேல் நீதிமன்றத்தில் நடத்த முடியுமா?
முகாமைத்துவமானி தெரிவுப் பரீட்சை இம்மாதம் 12இல் நடைபெறும்!
இன்று தீபாவளி பண்டிகை – உலகெங்கும் வாழும் கொண்டாடி மகிழ்வு!
|
|
|


