யாழ். மாவட்டத்தில் பல கூட்டுறவுப் பணியாளர்கள் பணியை விட்டுச் செல்லும் போக்கு அதிகரிப்பு
Tuesday, April 11th, 2017
யாழ். மாவட்டத்தில் பல கூட்டுறவுப் பணியாளர்கள் தமது பணியை விட்டுச் செல்லும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.
பணியாளர்களுக்குப் போதிய மாதாந்த சம்பளம் வழங்கப்படாமை, பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அதிகரித்த கெடுபிடிகள், பழிவாங்கல்கள் என்பனவே பணியாளர்கள் பணியை விட்டுச் செல்வதற்கான காரணங்கள் எனக் கூறப்படுகிறது.
கூட்டுறவுச் சங்கங்களில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளாமல் பணியாளர்கள் நெருக்கடிக்கு நிலைக்கு உள்ளாக்கப்படுவதால் விரக்தியடைந்த நிலையில் பணியாளர்கள் பணியை விட்டுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடமாகாணசபை அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு அறிக்கை சமர்ப்பிப்பு!
பேச்சுவார்த்தை வெற்றி - தொடருந்து சாரதிகள் சங்கம் தெரிவிப்பு!
பாரிசவாத இறப்புக்கள் அதிகரிப்பு - முதியவர்கள் தொடர்பில் அவதானம் தேவை என வைத்திய நிபுணர் பேரானந்தராஜா...
|
|
|


