யாழ். போதனா வைத்தியசாலையில் புத்தாண்டு தினத்தன்று பிறந்த 21 குழந்தைகள்!

Saturday, January 5th, 2019

கடந்த புத்தாண்டு தினத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 21 குழந்தைகள் பிறந்துள்ளன.

வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய்மார்கள் இவ்வாறு 21 குழந்தைகளை பிரசவித்துள்ளனர். இந்தப் பிரசவத்தின்போது 12 ஆண் குழந்தைகளும் ஒன்பது பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன.

புத்தாண்டு தினத்தில் இக் குழந்தைகள் பிறந்ததை அடுத்து தாய்மார்கள் இனிப்பு, சொக்லேட் என்பவற்றை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related posts: