மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்காதவகையில் வைரஸை கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!

Monday, October 12th, 2020

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அரசாங்கத்தின் நோக்கமென விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்காக பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினர் வழங்கும் ஆலோசனைகளை முறையாக பின்பற்றுவது அவசியம் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நெருக்கடி நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு ஹம்பாந்தோட்டை மாவட்டம் தயாராக வேண்டிய முறை தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: