யாழ். சட்டநாதர் கோவிலுக்கு அருகாமையில் வாள் வெட்டுத் தாக்குதல் – இருவர் படுகாயம்!

Thursday, May 5th, 2022

நல்லூர் கல்வியங்காடு சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அண்மையில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக புதன்கிழமை இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது. 47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.

3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்தனர்.

கல்வியங்காடு செங்குந்தா மைதானம் தொடர்பான பிணக்கே இந்தத் தாக்குதலின் பின்னணியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சில மணித்தியாலங்களின் பின்பே சம்பவ இடத்துக்குப் பொலிஸார் வருகை தந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி 6 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்கா...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியுடன் ...
குற்றங்களுக்காக கடந்த வருடம் கைது செய்யப்பட்டவர்களில் பாரிய எண்ணிக்கையிலானவர்கள் கல்வி அறிவு கொண்டவர...