யாழ்.குடாநாட்டில் சனியன்றிரவு அதிகூடிய மழை வீழ்ச்சி!
Monday, November 21st, 2016
நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை வீழ்ச்சி கிடைத்தது. வளிமண்டலவியல் திணைக்களத் தகவலில், நேற்று முன்தினம் இரவு 8.30மணியில் இருந்து நேற்றுக்காலை 8.30மணிவரை 97.7மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியது. இதவரை கிடைத்த வாசிப்பில் யாழ்.மாவட்டத்தில் கிடைத்த அதிகூடிய மழைவீழ்ச்சி இதுவாகும். நேற்றுக்காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30மணிவரை 5.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியது.
நயினாதீவில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் நேற்றுக்காலை 8.30மணிவரை 104 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பெறப்பட்டது. நடப்பு ஆண்டில் ஒரே தினத்தில் இலங்கையில் பெற்ற அதிகூடிய மழைவீழ்ச்சி இதுவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

Related posts:
புதிய ரம்புட்டான் அறிமுகம்!
பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கின் இரண்டாவது ப...
IMF இன் இலங்கை தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி!
|
|
|


