யாழ்.குடாநாட்டில் சனியன்றிரவு அதிகூடிய மழை வீழ்ச்சி!
Monday, November 21st, 2016
நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை வீழ்ச்சி கிடைத்தது. வளிமண்டலவியல் திணைக்களத் தகவலில், நேற்று முன்தினம் இரவு 8.30மணியில் இருந்து நேற்றுக்காலை 8.30மணிவரை 97.7மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியது. இதவரை கிடைத்த வாசிப்பில் யாழ்.மாவட்டத்தில் கிடைத்த அதிகூடிய மழைவீழ்ச்சி இதுவாகும். நேற்றுக்காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30மணிவரை 5.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியது.
நயினாதீவில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் நேற்றுக்காலை 8.30மணிவரை 104 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பெறப்பட்டது. நடப்பு ஆண்டில் ஒரே தினத்தில் இலங்கையில் பெற்ற அதிகூடிய மழைவீழ்ச்சி இதுவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
Related posts:
வாக்குரிமை உதாசினம் செய்யப்படுவதாக கடிதம்!
அரச ஊழியர்களிடம் அதிகபட்ச சேவையினை பெற்றுக்கொள்வது தொடர்பில் அவதானம் - விசேட ஆய்வொன்றை முன்னெடுக்கும...
பிராந்திய அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவை இன்றுமுதல் ஆரம்பம்!
|
|