யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன !

Sunday, August 7th, 2016

யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு யாழ். கல்வி வலயத்தில் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக யாழ். வலையக் கல்விப் பணிப்பாளர் என். தெய்வேந்திரராஜா தெரிவித்துள்ளார்.

சென் ஜேம்ஸ் வித்தியாலயம்(வகை-2), நாவாந்துறை றோ. க. வித்தியாலயம்(வகை-2), கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம்(வகை-2), கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயம்(வகை-2), கொழும்புத் துறை சென். ஜோசப் வித்தியாலயம்(வகை-02), சிறுப்பிட்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை-(வகை-3), கொக்குவில் மேற்கு சீ.சீ.த. க பாடசாலை(வகை-03) ஆகிய பாடசாலைகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பப் படிவங்களை யாழ். கல்வி  வலயத்தின் பொது நிர்வாகக் கிளையில் பெற்றுப் பூர்த்தி செய்து எதிர்வரும்-15-08-2016 ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் மேலும் கேட்டுள்ளார்.

Related posts: