மடு திருத்தல ஆடித் திருவிழாவில் 30 பக்தர்களுக்கே அனுமதி – வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை!
Thursday, June 17th, 2021மன்னார் மடு திருத்தலத்தில் ஆடித் திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டி மெல் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது நாட்டின் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக மடு திருவிழா வழமை போன்று இடம்பெற்றாலும் யாத்திரிகர்கள் செல்வது தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பாகவும், குறித்த திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள், சுகாதார நடைமுறைகள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்தும் ஏற்பாடுகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, உரிய திணைக்களங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது.
அத்துடன் குறித்த திருவிழா வழமைபோன்று இடம்பெற்றாலும் யாத்திரிகர்கள் திருவிழா திருப்பலியில் பங்குபற்ற முடியாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருவிழாத் திருப்பலி எதிர்வரும் ஆடி மாதம் 2ஆம் திகதி காலை 6:15 மணிக்கு மறைமாவட்ட ஆயர்களினால் கூட்டுத்திருப்பலியாக ஒப்பு கொடுக்கப்படவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து மேலும் பல திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.
இதில் மன்னார் மறைமாவட்ட பகுதிகளிலுள்ள குறிக்கப்பட்ட 30 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து பக்தர்கள் கலந்து கொள்ள முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|