யாழ்ப்பாண மாவட்­டத்­தில் 7 பிர­தேச செய­லர்­க­ளுக்கு விரை­வில் இடமாற்­றம்!

Monday, March 27th, 2017

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள 7 பிர­தேச செய­லா­ளர்­கள் இட­மாற்­றம் செய்­யப்­ப­ட­வுள்­ள­னர். இவர்­க­ளின் இட­மாற்­ற விவ­ரங்­கள் பொதுச் சேவை ஆணைக்­கு­ழு­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன என்­றும் தெரிய வரு­கின்­றது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் வரு­டாந்த இட­மாற்­றத்­துக்­குப் புறம்­பாக இந்த இட­மாற்­றம் மேற்கொள்ளப்­ப­ட­வுள்­ள­தாக யாழ். மாவட்­டச் செய­லக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

ஊர்­கா­வற்­றுறை, சங்­கானை, வேலணை, தெல்­லிப்­பழை, கர­வெட்டி, நல்­லூர், பரு­தித்­துறை பிர­தேச செய­ல­கங்­க­ளின் பிர­தேச செய­லா­ளர்­களே இட­மாற்­றம் செய்­யப்­ப­ட­வுள்­ள­னர். யாழ்ப்­பாண மாவட்டச் செய­ல­ரி­னால் பரிந்­து­ரைக்­கப்­பட்டு அனுப்­பப்­பட்ட இட­மாற்­றப் பட்­டி­யல், பொது­நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்­கள் அமைச்­சின் ஊடாக பொதுச் சேவை­கள் ஆணைக்­கு­ழு­வின் பரி­சீ­ல­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.  இந்த இட­மாற்­றம் அடுத்த மாதம் மேற்­கொள்­ளப்­ப­டக் கூடும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Related posts: