யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீ சத்தியசேவா நிலையத்தில் சித்திரா  பெளர்ணமியை முன்னிட்டு  நகர சங்கீர்த்தனமும் விசேட பஜனையும்

Friday, April 22nd, 2016

திருநெல்வேலி இராமநாதன் வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீ சத்தியசேவா நிலையத்தில் சித்திரா  பெளர்ணமியை முன்னிட்டு நேற்று (21)  நகர சங்கீர்த்தனமும் விசேட பஜனையும் இடம்பெற்றது.

அதிகாலை-4.45 மணிக்கு நகர சங்கீர்த்தனம் மேற்படி சாயி நிலையத்திலிருந்து ஆரம்பமாகி இராமநாதன் வீதி, குமாரசாமி வீதி, இந்துமகளிர் ஒழுங்கை வழியாக காலை-6.30 மணியளவில் மீண்டும் சாயி நிலையத்தை வந்தடைந்தது. தெய்வீக உணர்வு பரவ வேண்டும் எனும் நோக்குடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

சாயி நிலையத்தில் காலை- 8.30 மணிக்குப் பிரசாந்திக் கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி அஷ்டோத்திரம், வேத மந்திரம் ,காயத்ரி மந்திரம் , விசேட பஜனை, விசேட சொற்பொழிவு நிகழ்வு என்பன நடைபெற்றது. இதன்போது வடபிராந்திய சத்திய சாயி நிலையத்தைச் சேர்ந்த  வைத்திய கலாநிதி ஆர்.கணேச மூர்த்தி  ” அவதார மகிமை எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார் . சாயி பஜனை , மங்களாராத்தியைத் தொடர்ந்து கலந்து கொண்ட சாயி அன்பர்கள் அனைவருக்கும் மதிய போசனம் வழங்கப்பட்டது.

Related posts: