இலங்கையில் பொருளாதார சவால்களைத் தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை !

Monday, June 6th, 2022

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான சீனத் தூதருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்..

இச் சந்திப்பின் போது, தூதுவர் ஜென்ஹோங் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்து விளக்கியதுடன், இருதரப்பு ஈடுபாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்போதைய சூழ்நிலையின் போது சீனாவின் தாராளமான உதவிகளையும் ஆதரவையும் பாராட்டிய அதே வேளையில், இலங்கையில் பொருளாதார சவால்களைத் தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்..

இரு தரப்பினரும் பன்முக உறவுகளையும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பையும் பாராட்டினர். இச் சந்திப்பின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: