யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – மூடப்பட்டது அரச வங்கி!

Wednesday, August 11th, 2021

தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தக் கிளையில் பணியாற்றும் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளை மாற்று நடவடிக்கை மேற்கொள்ளும் வரை மூடுமாறு சுகாதார மருத்துவ அதிகாரியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு கோரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையில் பணியாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களையும் 14 நாள்களுக்கு சுயதனிமைப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: