எதிர்வரும் வியாழன்முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!
Sunday, January 24th, 2021இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொவிட் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் புதன்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்’.
நாட்டிற்குத் தேவையான கொவிட் மருந்துகளை விரைவாக கொண்டுவருவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சித் திட்டத்தின் 7 ஆவது வேலைத்திட்டத்தில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார்.
இதன்போது, பல்வேறு விடயங்கள் குறித்து உரையாற்றிய ஜனாதிபதி, மக்கள் பல எதிர்பார்ப்புகளின் மத்தியில் தன்னை அதிகாரத்திற்கு கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் நான்கு வருட காலப்பகுதியில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|