யாழ்ப்பாணத்தில் அப்துல் கலாம்!
Sunday, March 13th, 2016பிரபல விஞ்ஞானியும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் உருவச்சிலையினை யாழ்.பொதுநூலகத்தில் நிறுவவுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார்
யாழ்.கீறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களுக்கான விருந்துபசார நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அவரின் நினைவாக பாதி உருவச்சிலையினை நிறுவவுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவில் செய்துகொண்டிருக்கும் சிலை மிக விரைவில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்து யாழ்.பொதுநூலகத்தில் உள்ள இந்திய கோர்னரில் நிறுவவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இவ்விடயம் யாழ் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்சாரக் கட்டணத்தை உயர்த்துமாறு கோரிக்கை!
நீர் கட்டணத்தை அதிகரிக்க முடிவு?
கொரோனா அச்சுறுத்தலின் உச்சத்தில் இலங்கை - ஒரே நாளில் 44 கொவிட் மரணங்கள் பதிவு!
|
|