யாசகர்களைப் பிடித்து அகற்ற ரயில் நிலையங்களில் நடவடிக்கை!

ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் யாசகம் பெறுபவர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜயசமரசிங்க தெரிவித்துள்ளார்.
யாசகர்கள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் கருத்திற்கொண்டே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தேவை ஏற்படின் பொலிஸாரின் உதவியையும் நாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையானது நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது.- அமைச்சர் வஜிர அபேவர்த்தன
இலங்கையில் எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரம்!
யாழ். இந்தியத் தூதரகத்திற்கு புதிய துணைத் தூதுவராக சாய் முரளி இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமனம்!
|
|