மே தினவருமானத்தில் இலாபம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை
Monday, May 2nd, 2016
மே தின கொண்டாட்டங்களுக்கு பேருந்துகளை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபை 45 மில்லியன் ரூபாவை சம்பாதித்துள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க தெரிவித்துள்ளார்.
மே தினக் கூட்டங்களுக்காக 4 ஆயிரம் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் குழுக்கள் மே தினக் கூட்டங்களுக்காக நேற்றைய தினம் பணத்தை செலுத்தி 3 ஆயிரத்து 500 பேருந்துகள் பெற்றுக்கொண்டுள்ளன.
இதனால், நேற்றைய தினம் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளுக்கு போதிய பேருந்தகள் இல்லாமல் போயுள்ளதுடன்,இன்று நிலைமை வழமைக்கு திரும்பும் எனவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி முகாமையாளர் கூறியுள்ளார்.
Related posts:
அமரர் சிறிலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
இலங்கையில் மேலும் 26 கொவிட் மரணங்கள்: 3 மாத குழந்தையும் பலி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு!
அரச பணியாளர்களுக்கு தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் - அமைச்சரவையும் அங்கீகாரம்!
|
|
|


