அமரர் சிறிலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!

Wednesday, November 30th, 2016

அமரர் செபஸ்ரியன் சிறிலின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆரம்ப கால ஆதரவாளரான அமரர் சிறில் கடந்த 26 ஆம் திகதி காலமானார். அமரரது பூதவுடல் நாரந்தனை – ஊர்காவற்றுறையில் உள்ள அன்னாரது இல்லத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் அன்னாரது இல்லத்திற்கு சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா.வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

15239414_1242298952475856_1954656567_n

15310209_1242298939142524_1638782458_n

15310543_1242298929142525_1516385663_n

Related posts: