எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்த திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
Monday, May 16th, 2022எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்துவதற்காக திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னரான முதலாவது அமைச்சரவை நேற்று இடம்பெற்றது.
நேற்றைய கூட்டத்தில் பிரதமர் முன்வைத்த இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசலை பகிர்ந்தளிக்கு நடவடிக்கை இன்று முற்பகல்முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
“பக்குரு வலைகளுக்கு" வருகிறது தடை!
யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் பரிசோதனை - எரிவாயுவின் விலை தொடர்பான அறிவுறுத்தல்!
“போட் சிட்டி”யில் நடைப்பாதை திறப்பு – இலங்கையின் அரச தலைவர்கள் பங்கேற்பு!
|
|