மூளைக் காய்ச்சல் – யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் பலி!

Wednesday, November 15th, 2023

மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் நேற்றையதினம் (14) உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் (48) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த கிராம சேவகர் தீபாவளி தினத்தன்று மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மூளைக் காய்ச்சலினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மரண விசாரணை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பாதுகாப்பு உடைகள் வேண்டும் - திடீர் மரண விசாரணையாளர் தொடர...
மாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடன் ஜனாதிபதி ரணில் ஆர...
நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி ...

யாழ்.போதனா வைத்தியசாலையில்  கடந்த வதுருடம் வெளிநோயாளர் பிரிவில் மட்டும் 3 இலட்சம் பேருக்கு சிகிச்சை ...
பயங்கரவாத தடைச்சட்டத்தில் மீளாய்வுகள் மேற்கொண்டு தனிச்சட்டமாக்க வேண்டும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமை...
உயிர்கள் , உடைமைகளைப் பாதுகாக்க நிதானத்தைக் கடைபிடிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்து!