முன்னாள் தவிசாளர்களிடம் மோசடி குறித்து விசாரணை!

Monday, December 5th, 2016

வடக்கில் இடம்பெற்ற நெல்சிப் திட்டங்களின்போது ஏற்பட்டதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் 3 பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்களை விசாரணைக்காகத் தலைமைச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அமைந்துள்ளது.

வடக்கில் இடம்பெற்ற நெல்சிப் திட்டங்களின் பொது பல மில்லியன் ரூபா ஊழல் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நெல்சிப் திட்ட மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவென வடக்கு மாகாண சபையும் பிரதம செயலாளரும் தனித்தனியே விசாரணைக் குழுக்களை அமைத்திருந்நதனர். வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, காரைநகர் அகிய 3 சபைகளின் தவிசாளர்களும் முதல் கட்ட விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

investigation-630x2861

Related posts: