வேலணை சிற்பனை முருகன் கோயிலில் திருட்டு!
Wednesday, October 5th, 2016வேலணை சிற்பனை முருகன் கோயிலில் திருட்டுப்போயுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலயக் கூரையைப் பிரித்து உள் நுழைந்த திருடர்கள் களஞ்சியசாலையிலிருந்த டிவிடி பிளேயர், ஒலிபெருக்கி சாதனம், மின்குமிழ்கள் மற்றும் உண்டியலில் இருந்த ஒரு தொகை பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
எனினும் திருடப்பட்ட மின்குமிழ் அருகில் இருந்த வயல் காணி ஒன்றில் இருந்து பின்னர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட தடவியல் பொலிஸார் திருட்டு நபர்களின் கைரேகைகளை பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
மீதொட்டுமுல்லை குப்பைமேடு - உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு!
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்களை உறுதி செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீடிப்பு – கல்வி அமைச்சு!
பொருளாதார அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் காரணிகளை கண்டறிந்து, முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்தியா ...
|
|