இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணிகளில்

Monday, April 17th, 2017

மீதொட்டமுல்ல பகுதியில் குப்பை மேடு சரிந்து வீழ்ந்து அனர்த்தம் ஏற்பட்ட பகுதில் இராணுவத்தினர் தொடர்ந்தும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கனரக இயந்திரங்கள் மற்றும் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் இந்த பணிகளில்  ஈடுபட்டு வருகின்றனர்.இப்பகுதியில் மேற்கு பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் தலைமையில்; நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் இராணுவ பொறியியலாளர்களது 10 அகழ்வு இயந்திரங்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான ட்ரக் வண்டிகளும் நிவாரண நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related posts: