முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு போட்டிப் பரீட்சை!

Wednesday, July 4th, 2018

வடக்கு மாகாண பொதுச்சேவையின் மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 3 பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையானது எதிர்வரும் 2018.07.14 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பரீட்சைக்கு விண்ணப்பித்து தகைமையுடைய பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே 2018.07.11 ஆம் திகதிக்கு பின்னரும் அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடமாகாணம், இல 393ஃ48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்னும் முகவரியுடனோ 021 221 9939 என்னும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

எவ்வாறாயினும் பரீட்சார்த்திகளுக்குரிய அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் சி.ஏ.மோகன்ராஸ் அறிவித்துள்ளார்.

Related posts: