மீள் அறிவித்தல் வரை நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை ஊரடங்கு உத்தரவு !

Saturday, June 13th, 2020

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளைமுதல் (14)  ஊரடங்கு உத்தரவானது மீள் அறிவித்தல் வரை நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அரச, தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் காரியாலயங்களின் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லும்போது, அன்றாட இயல்பு நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகளை முன்னர் அறிவிக்கப்பட்டவாறு பின்பற்றுமாறு அனைத்து தரப்பினரிடமும் அரசாங்கம் கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக்கறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: