மீளவும் யுத்தத்தை ஏற்படுத்த இனவாத சக்திகள் முயற்சி!

Monday, February 13th, 2017

இனவாத சிந்தனை கொண்ட சில நபர்கள் நாட்டில் மீண்டும் யுத்தமொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பாராளுமன்ற சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சகல இனங்களையும் பாதுகாப்பது நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் கண்டியில் இடம்பெற்ற பொதுக் கூட்ட மொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர்  கூறியுள்ளார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் நடாத்தப்படவுள்ள பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பில் இலகுவில் வெற்றிகொள்ள முடியும் என வும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Luxman-720x480

Related posts: