மீனவர் பிரச்சினை குறித்து விஷேட பேச்சுவார்த்தை!
Thursday, August 31st, 2017வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களை புனரமைப்பு செய்வது தொடர்பிலான பிரச்சினைகள் குறித்த விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் மஹிந்த அமரவீர, வட மாகாண ஆளுனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, வடக்கிலுள்ள தெல்லிப்பளை, மாதகல், புங்குடுத்தீவு, ஆணைக்கோட்டை, மண்டைத்தீவு ஆகிய ஐந்து துறைமுகங்களை மீள்நிர்மாணம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப் பகுதியில் மீனவர்களுக்கு தேவையான எரிபொருளை விநியோகிக்கும் நிலையம் மற்றும் மீன் களஞ்சியசாலை போன்றவற்றையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
சுதுமலையில் நேற்றிரவு வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம்!
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தை தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை !
மீண்டும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம் - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
|
|