மலேசியாவிலிருந்து நாடு திரும்பியவர் மன உளைச்சலால் உயிர் மாய்ப்பு!

Saturday, June 16th, 2018

மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய இளைஞர் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். கைதடி வடக்குப் பகுதியைச் சேர்ந்த சிறிநிவாசன் ஜெயசீலன் (வயது-34) என்பவரே உயிரிழந்தவராவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில் கைதடி வடக்கில் இடம்பெற்றுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு உணவு அருந்திவிட்டு படுத்திருந்தவரைக் காணாததால் தேடிய போது வீட்டு விறாந்தையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

அயலவர்களின் உதவியுடன் மீட்டு யாழ் போதனா மருத்துவமனைக்கு கொண்டுவந்த போது ஏற்கனவே சாவடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றப் பதில் நீதிவான் செ.கணபதிப்பிள்ளை முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அறிக்கையைப் பார்வையிட்ட பதில் நீதிவான் பிரதேச திடீர் சாவு விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் மூலம் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.திடீர் சாவு விசாரணை அதிகாரி யாழ் போதனா மருத்துவமனையில் சாவு விசாரணைகளை நடத்தி மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி மூலம் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்பட்டது.மலேசியாவில் நீண்டகாலமாக தங்கியிருந்த இவர் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார் எனவும் அதனால் மனவிரக்திக்கு உள்ளான நிலையில் வாழ்ந்து வந்தார் எனவும் மரண விசாரணையில் சாவடைந்தவரின் தந்தை சாட்சியமளித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: